Sheikhagar.org - Official site for sheikhagar
Collection of Islamic Da'wa Centre UK events held in April 2018
Created On: Saturday, 05 May 2018 08:15
Collection of Islamic Da'wa Centre UK events held in April 2018 Usthaz AshSheikh AC Agar Mohammed was the guest there!
- Theme speech of IDC UK Annual Conference
- மேற்குலகில் இஸ்லாம் சவால்களும் சந்தர்ப்பங்களும்
- Jum'ah Sermon held at IDC UK Masjid on 6th April 2018
அஸ்மாஉல்லாஹ் அல் ஹுஸ்னா - உரைத்தொடர் - 35
Created On: Sunday, 22 April 2018 18:04
அர்ரபீக் - I
சமகால நெருக்கடி நிலையை எதிர்கொள்வதற்கான மூலோபாயங்கள்
Created On: Friday, 13 April 2018 19:45
ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரதித் தலைவருமான அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் அவர்கள் கடந்த 23.03.2018 அன்று ஜாவத்தை ஜுமுஆப் பள்ளிவாசலில் நிகழ்த்திய குத்பா பிரசங்கத்தின் சாராம்சத்தை அல்ஹஸனாத் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
நன்றி: அல்ஹஸனாத் ஏப்ரல் மாத இதழ்- 2018
தொகுப்பு: வ. முஹம்மத் நபீல்
----------
இன்று முஸ்லிம் உம்மத் உலகளாவிய ரீதியிலும் உள்நாட்டு மட்டங்களிலும் நெருக்கடியானதொரு கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இஸ்லாம் பற்றிய பீதியும் அச்சமும் முஸ்லிம்கள் குறித்த வெறுப்பும் காழ்ப்புணர்வும் உலகளாவிய ரீதியில் விதைக்கப்பட்டதன் விளைவுகளை முஸ்லிம் உம்மத் கோரமாக அனுபவித்து வருகின்ற காலம் இது. இன்று இஸ்லாமோபோபியா ஒரு தனியான துறையாக மாறியிருக்கிறது. இதற்கென்று கோடிக்கணக்கான டொலர்கள் ஒதுக்கப்பட்டு, இதற்கென்றே வளவாளர்கள் நியமிக்கப்பட்டு சர்வதேச மட்டங்களிலும் பிராந்திய மட்டங்களிலும் தேசிய மட்டங்களிலும் திட்டமிட்ட அடிப்படையில் இந்தத் துறை வளர்க்கப்பட்டு வருவதை நாம் அறிவோம். அவ்வாறே இராணுவ ரீதியாகவும் சிந்தனா ரீதியாகவும் திட்டமிட்ட படையெடுப்புகளுக்கு முகம்கொடுத்திருக்கும் சர்வதேச இஸ்லாமிய உம்மத் உளவியல் ரீதியான படையெடுப்புக்கும் முகம்கொடுத்திருக்கின்றது. முஸ்லிம்களை உளவியல் ரீதியாக பலவீனப்படுத்தி தோல்வி மனப்பான்மையை (Defeated Mentality) உருவாக்கும் நோக்குடன் உளவியல் ரீதியான ஆக்கிரமிப்பு முடுக்கி விடப்பட்டிருக்கிறது.
இன்று முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்கின்ற இலங்கை போன்ற நாடுகளில் உள்நாட்டு அரசியல் நிகழ்ச்சிநிரல், பிராந்திய அரசியல் நிகழ்ச்சிநிரல், சர்வதேச அரசியல் நிகழ்ச்சிநிரல்களுக்கூடாக இனவாத, மதவாத மோதல்களை உருவாக்குகின்ற ஓர் அபாயகரமான சூழல் தயார்படுத்தப்பட்டு வருவதை நாம் அறிவோம்.
பிரச்சினைகளைப் பற்றி பேசுகின்ற அதேநேரம் அவற்றுக்கான காத்திரமான தீர்வுகளைப் பற்றி அதிகமதிகம் பேச வேண்டியிருக்கிறது. அவை நடைமுறைச் சாத்தியமான, யதார்த்தமான தீர்வுகளாகவும் அமைய வேண்டும். நாம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு துப்பாக்கிகளும் தோட்டாக்களும் குண்டுகளுமே பதில் சொல்லும் என்ற பார்வை யதார்த்தமானதல்ல. நடைமுறைச் சாத்தியமானதுமல்ல. நாம் எதிர்பார்க்கின்ற நல்ல விளைவுகளைத் தருகின்ற வழிமுறையுமல்ல. அந்த வகையில் இத்தகையதொரு நெருக்கடியான சூழ்நிலையை வெற்றிகரமாக எதிர்கொண்டு அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டு அவற்றினடியாக செயற்பட வேண்டிய தேவையும் கடப்பாடும் இருக்கிறது.
1. பலமிக்க ஓர் அரசியல் கட்டமைப்பு
இன்று பலமிக்க ஓர் அரசியல் கட்டமைப்பை சமூகம் வேண்டி நிற்கிறது. அரசியல்தான் இன்றைய உலகின் மிகப் பெரிய சக்தி என்ற யதார்த்தத்தை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. இருக்கின்ற அரசியல் தலைமைகளை வழிப்படுத்தி, நெறிப்படுத்தி, வலுப்படுத்தி அனைவரையும் அரவணைத்தவாறு பயணிக்கின்ற ஒரு கலாசாரம் முன்னெடுக்கப்படல் வேண்டும். அரசியல் தலைமைகளை கொச்சைப்படுத்தி, விமர்சனம் என்ற பெயரில் அவர்களை அவமானப்படுத்தி உள ரீதியாக பலவீனப்படுத்துவதால் விளைவுகள் இன்னும் மோசமடையுமே தவிர நன்மைகள் ஏற்படப் போவதில்லை.
இன்று தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் பல்வேறு விடயங்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது. எமது இருப்பையும் பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்தக்கூடிய முதிர்ச்சியான அரசியல் நகர்வு அவசியப்படுகின்றது. இதற்காக, அரசியல் தலைமைகளை நாம் அனைவரும் இணைந்து வழிநடத்த வேண்டிய கடப்பாடு இருக்கிறது.
2. மிகப் பெரிய ஆயுதம் ஊடகம்
ஊடகம்தான் இன்றைய உலகின் மிகப் பெரிய ஆயுதம். அரசியல் பலம் ஒரு பக்கம் என்றால் ஊடக பலம் (Media) மறுபக்கம் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஊடக பலத்தை குறைமதிப்பீடு செய்கின்ற சமூகம் தலைதூக்க முடியாது. கப்பற் படையை வைத்திருந்தவர்கள் 19ஆம் நூற்றாண்டின் ஜாம்பவான்கள். விமானப் படையை வைத்திருந்தவர்கள் 20ஆம் நூற்றாண்டின் ஜாம்டபவான்கள். யாரின் கைகளில் ஊடகம் இருக்கின்றதோ அவர்கள்தான் 21ஆம் நூற்றாண்டின் பலமிக்க சக்திகளாக திகழ்வார்கள்" என்று மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹாதிர் முஹம்மத் குறிப்பிட்ட கருத்து இங்கு நினைவுகூரத்தக்கது.
மியன்மாரில் ஏற்பட்ட பேரவலத்திற்கு சமூக ஊடகங்களே மிகப் பிரதான பங்கு வகித்ததை ஐ.நா. ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறது. நமது நாட்டில் இடம்பெற்ற வன்முறைக்குப் பின்னாலும் சமூக ஊடகங்களின் வகிபாகம் கூடுதலாக இருந்ததை நாம் அறிவோம். அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில் தாக்கம் ஙெ்லுத்துகின்ற அளவுக்கு ங்மூக ஊடகங்கள் கையாளப்படுகின்றன. ஆகவே, ஊடகத்தை எவ்வகையிலும் நாம் குறைமதிப்பீடு செய்யலாகாது. அதுதான் இன்றைய சக்தியும் பலமும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே, எமக்கெதிரான சவால்களை முறியடிக்க பலமான அரசியல் கட்டமைப்பும் வினைத்திறனான ஊடகமும் அவசியம். இதன்பால் எமது கவனத்தை குவிக்க வேண்டியிருக்கிறது.
குத்பா - சமகால நெருக்கடி நிலையை எதிர்கொள்வதற்கான மூலோபாயங்கள்
Created On: Saturday, 24 March 2018 19:15
குத்பா - சமகால நெருக்கடி நிலையை எதிர்கொள்வதற்கான மூலோபாயங்கள்
அஸ்மாஉல்லாஹ் அல் ஹுஸ்னா - உரைத்தொடர் - 34
Created On: Saturday, 17 March 2018 20:32
அல் ஹாதீ -III
Page 3 of 64
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>